மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அழைத்து செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக என்ஜினீயர் மனைவி தீக்குளித்து சாவு

ஆவடியில் கோவிலுக்கு அழைத்து செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக என்ஜினீயர் மனைவி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.

தினத்தந்தி

குடும்ப தகராறு

ஆவடி அடுத்த கொள்ளுமேடு அருள்நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 37). இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தியா (32). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், மோதிகா (6) என்ற மகளும், சரண் (4) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6-ந் தேதி நந்தகுமார் தனது மனைவி சந்தியாவை, காஞ்சீபுரம் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட போவதற்காக அழைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சந்தியா, வீட்டில் இருந்த மண்எண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

பெண் பலி

தீயானது உடலில் பற்றி எரிந்ததால் வலி தாங்கமுடியாமல் சந்தியா கதறினார். இதையடுத்து, அருகில் இருந்த நந்தகுமார் உடனடியாக அவரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். மேலும், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மீண்டும் வானகரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்ததார். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விரைந்து வந்து சந்தியா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்