மாவட்ட செய்திகள்

சமையல் செய்த போது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது; தாய்-மகள் படுகாயம்

சமையல் செய்த போது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தாய்-மகள் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

யாதகிரி,

யாதகிரி மாவட்டம் சகாப்புரா தாலுகா சாமனாலா கிராமத்தை சேர்ந்தவர் பீமவவ்வா. இவரது மகள் நாகம்மா. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகம்மா கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் பீமவவ்வாவும், நாகம்மாவும் படுகாயம் அடைந்தனர். மேலும் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சகாப்புரா புறநகர் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பீமவவ்வா, நாகம்மாவை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சகாப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சகாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்