மாவட்ட செய்திகள்

வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2017ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாயத்தில் வீர, தீர சாதனை புரிந்த பெண்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையவர்கள் உரிய சாதனை சான்றுகளுடன் விண்ணப்பங்களை வருகிற 8ந்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி1, தொலைபேசி எண்: 04612321149 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் தெரிவித்து உள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு