மாவட்ட செய்திகள்

கூடலூர்-குமுளி இடையே மலைப்பாதையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

கூடலூர்-குமுளி இடையே மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

கூடலூர்,

தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளிக்கு தேனி மாவட்டம் லோயர்கேம்பிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி வழியாக சாலை செல் கிறது. தென்மாவட்டங்களில் இருந்து கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் இம்மலைப்பாதை வழியே செல்கிறது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மலைப்பாதையில் வழித்துணை மாதாகோவில் மேல்புறம் உள்ள எஸ் வளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குமுளி போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி வாகனங்கள் ஒருபுறமாக செல்லும்படி பாதை அமைத்து கொடுத்தனர். தொடர்ந்து சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மண்சரிவினால் குமுளி மலைப்பாதையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்