மாவட்ட செய்திகள்

ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் சட்டம் பேசியுள்ளது கவர்னர் கிரண்பெடி கருத்து

ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் சட்டம் பேசியுள்ளது என்று கவர்னர் கிரண்பெடி கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுவை மாநில அரசு அதிகாரம் குறித்த வழக்கில் ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மத்திய அரசு மற்றும் புதுவை நிர்வாகியின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் சட்டம் பேசியுள்ளது. இதை நாம் அனைவரும் மதிக்கிறோம். புதுவை மக்களின் நன்மைக்காக ஒருமைப்பாடு மற்றும் செயல்திறனை அடிப்படையாக கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம்.

புதுவை யூனியன் பிரதேசம் பல்வேறு விஷயங்களில் சிறந்த திறனை கொண்டுள்ளது. கவர்னர் அலுவலகமும் அவரது குழுவும் சட்டத்திற்கு இணங்க புதுவை மக்களின் நன்மைக்காக பணியாற்ற உறுதியாக உள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

நாராயணசாமி

தீர்ப்பு தொடர்பாக முதல்அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்ட போது, தீர்ப்பு தொடர்பான முழு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை. அது கிடைத்த பின் எனது கருத்தை தெரிவிக்கிறேன் என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்