மாவட்ட செய்திகள்

கே.வி.குப்பத்தில் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 66 பேர் கைது

மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 66 பேர் கைது

தினத்தந்தி

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் பஸ்நிலையம் அருகே காட்பாடி சாலையில் அ.தி.மு.க.வினர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கே.வி.குப்பத்தை அடுத்த காமராஜபுரம் - விரிஞ்சிபுரம் இடையே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலாற்று தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும். பட்டா நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். உரிய நிவாரணம் முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது.

தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மேகநாதன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன் உள்ளிட்ட 66 பேரை கைது செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு