மாவட்ட செய்திகள்

கரூர் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு

கரூர் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.

நொய்யல்,

கரூர் மாவட்டம் சேமங்கி அருகே செல்வநகரை சேர்ந்தவர் காத்தான் (வயது 55). இவரது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு வானத்தில் இருந்து அதிக சத்தத்துடன் ஒரு மர்ம பொருள் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காத்தான் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. வெடிபொருளாக இருக்கலாம் என கருதி வீட்டின் கதவை திறக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை விடிந்ததும் காத்தான் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அந்த மர்மபொருள் எந்திரத்தின் இரும்புத் துண்டு போன்று காணப்பட்டது. மேலும் விழுந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது.

இது குறித்து வேட்டமங்கலம் (மேற்கு) கிராம நிர்வாக அதிகாரி பூபதிக்கும், வேலாயுதம்பாளையம் போலீசாருக்கும் அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசாரும் கிராம நிர்வாக அதிகாரி பூபதியும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

இரும்பு துண்டின் எடை 5 கிலோவுக்கு மேல் இருக்கும். மேலும் எதற்குரிய பொருள் என்பதை கண்டறியமுடியவில்லை. இதையடுத்து அந்த இரும்புத் துண்டு கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க எடுத்து செல்லப்பட்டது. வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு