மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலி தந்தையுடன் கைது

வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலி தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

காட்பாடி,

காட்பாடி வஞ்சூரைச் சேர்ந்தவர் சுனில் (வயது 28). இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், விருதம்பட்டு பாலாற்றங்கரைக்கு அருகில் உள்ள சர்க்கார் தோப்புப்பகுதியில் சுனில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அப்பகுதியில் வசித்த கோகிலா என்ற பெண்ணுக்கும் சுனிலுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கோகிலாவும் அவரது தந்தை முத்துவும் தலைமறைவாகி விட்டனர்.

இந்த வழக்கில் ஆற்காட்டை சேர்ந்த டிரைவர் மணிகண்டன், காங்கேயநல்லூரை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோகிலாவுக்கு சுனில் செக்ஸ் தொல்லை கொடுத்ததால் தான் கொலை செய்தோம் என மணிகண்டன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கோகிலா, முத்து ஆகியோரை காட்பாடியில் விருதம்பட்டு போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு