மாவட்ட செய்திகள்

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி திருநாவுக்கரசர் பேட்டி

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று, பேராவூரணியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

தினத்தந்தி

பேராவூணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வந்தார்.

அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசு அனைத்து தரப்பு மக்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

அவர்களுடன் கூட்டணி சேரும் கட்சிகளையும் மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.- காங் கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். மத்தி யில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்