மாவட்ட செய்திகள்

தாணிக்கோட்டகம் ஊராட்சியில் 2-வது வார்டுக்கு மறு வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது

தாணிக்கோட்டகம் ஊராட்சியில் 2-வது வார்டுக்கு நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தினத்தந்தி

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் ஊராட்சியில் கடந்த 30-ந்தேதி 2-ம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது தாணிக்கோட்டகம் தெற்குகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் மணிவண்ணன், முருகையன், குணசீலன், உத்திராபதி ஆகிய 4 பேரும் போட்டியிட்டனர். இந்தநிலையில் வாக்குச்சீட்டில் 4 சின்னங்களுக்கு பதில் 5 சின்னங்கள் இருந்தன. 4 சின்னங்களுக்கு பதிலாக கூடுதலாக ஒரு சின்னம் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து வேட்பாளர்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் செல்லத்துரையிடம் முறையிட்டனர். உடனடியாக அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் தாணிக்கோட்டகம் ஊராட்சியில் உள்ள 2-வது வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவை நிறுத்த உத்தரவிட்டார்.

மறுவாக்குப்பதிவு

அப்போது 2-வது வார்டில் மொத்தம் உள்ள 420 வாக்குகளில் 172 வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராசு நேற்று தாணிக்கோட்டகம் ஊராட்சியில் 2-வது வார்டுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார்.

அதன்படி நேற்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மதியரசு முன்னிலையில் மறுவாக்குப்பதிவு தாணிக்கோட்டகம் ஊராட்சியில் அமைதியான முறையில் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு