மாவட்ட செய்திகள்

காதல் ஜோடி தஞ்சம்

வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு ஒரு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

தினத்தந்தி

வடமதுரை:

குஜிலியம்பாறை தாலுகா, கூம்பூர் அருகே உள்ள ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). கார் டிரைவர். இவருக்கும், ஈசநத்தத்தை சேர்ந்த சபீனா ஆஷ்மின் (19) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் திருமலைக்கேணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்பு காதல்ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்