மாவட்ட செய்திகள்

சூளகிரியில் சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ் 40 பயணிகள் உயிர் தப்பினார்கள்

பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறமாக இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதில் 40 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

தினத்தந்தி

சூளகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அந்த நேரம் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறமாக இருந்த பள்ளத்தில் இறங்கியது.

இதில் 40 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்