மாவட்ட செய்திகள்

திருமண ஆசைவார்த்தை கூறி கர்ப்பம்: மாணவி தற்கொலைக்கு காரணமானவருக்கு சிறை தண்டனை சரியே ஐகோர்ட்டு தீர்ப்பு

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கி, அவரது தற்கொலைக்கு காரணமானவருக்கு காரைக்கால் கோர்ட்டு வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை சரியானது தான் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

புதுச்சேரி மாநிலம், காரைக்காலை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். சரியாக படிக்கவில்லை என்று அவரது தந்தையும், கல்லூரி பேராசிரியர்களும் திட்டியதால், அவர் இந்த முடிவை எடுத்தார் என்று முதலில் கூறப்பட்டது.

இதுகுறித்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அந்த மாணவி வயிற்றில் 3 மாத கரு இருந்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மாணவியின் வீட்டிற்கு எதிரே திருணமாகி குடும்பத்துடன் வசிக்கும் திராவிட மணி என்பவர், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து திராவிட மணி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த காரைக்கால் கூடுதல் செசன்சு கோர்ட்டு, 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை திராவிட மணிக்கு வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திராவிட மணி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் என அனைத்துமே மாணவியின் தற்கொலை முடிவிற்கு திராவிடமணி தான் காரணம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்து காரைக்கால் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு சரியானது. எனவே, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு அளித்துள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்