மாவட்ட செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே மது பாட்டில்கள் ஏற்றி வந்த டெம்போ கவிழ்ந்தது

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்கள் ஏற்றி சென்ற டெம்போ கவிழ்ந்தது.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை மதுபாட்டில்களை ஏற்றிய டெம்போ சானல் கரையோர பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றது. அதை ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த அருண் (வயது40) என்பவர் ஓட்டினார்.

கடைக்கு செல்வதற்காக அருண் டெம்போவை திருப்பும் போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த டெம்போ வெளிசுற்றுச்சுவர் அருகில் உள்ள மரத்தில் மோதி மது பாட்டில்களுடன் கவிழ்ந்தது. இதனால் அதில் மதுபாட்டில்கள் இருந்த அட்டை பெட்டியும் கீழே விழுந்தன. ஆனால் டிரைவர் காயமின்றி தப்பினார்.

ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள்

டெம்போவில் செண்பகராமன்புதூர் கடைக்கு மட்டுமல்லாமல் சுவாமியார் மடம் பகுதியில் உள்ள கடைக்கும் சேர்த்து, மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ஏற்றப்பட்டு இருந்தது.

இந்த விபத்தில் ஒவ்வொரு அட்டை பெட்டியிலும் 4 முதல் 5 மதுபாட்டில்கள் உடைந்து இருந்தன. இவ்வாறு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் உடைந்தன. இந்த விபத்து டாஸ்மாக் கடை அருகே நடந்ததால், உடனே கடை ஊழியர்கள் ஓடி வந்தனர். இதனால் மதுபாட்டில்களை வெளியாட்கள் யாரும் எடுத்து செல்லாமல் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடனே வேறு டெம்போ வரவழைக்கப்பட்டு, அதில் மதுபாட்டில்களை ஏற்றி சுவாமியார் மடத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை