மாவட்ட செய்திகள்

பேரம்பாக்கம் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு

பேரம்பாக்கம் அருகே விவசாயி வீட்டில் நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது.

தினத்தந்தி

திருவள்ளூர்,

பேரம்பாக்கம் அருகே உள்ள செஞ்சி மதுரா கண்டிகையை சேர்ந்தவர் வேணு (வயது 40). விவசாயி. இவரது மனைவி பிரபாவதி (38). இவர்களுக்கு தியாகராஜன், கருணாகரன் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேணு தன் வீட்டின் அருகில் உள்ள தன்னுடைய வயலை பார்ப்பதற்காக மனைவியுடன் சென்றார்.

அவரது மகன் தியாகராஜன் வெளியே சென்று விட்டார். மற்றொரு மகனான கருணாகரன் உடல்நிலை சரியில்லாததால் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து வயலுக்கு சென்ற கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகை திருட்டு

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகையும், கிலோ வெள்ளிப்பொருட்களும், ஒரு செல்போனும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து வேணு கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்