மாவட்ட செய்திகள்

தொப்பூர் கணவாயில் 50 அடி ஆழ பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி ஆழ பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

நல்லம்பள்ளி,

மராட்டிய மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டது. இந்த லாரியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஓட்டி வந்தார். உடன் கிளனர் வந்தார். இந்த லாரி நேற்று மாலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி ஆழ பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர், கிளனர் ஆகிய 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததால் அந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்