மாவட்ட செய்திகள்

விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தினத்தந்தி

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு முருகன் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கொடிமரம் முன்பாக ஹோமங்கள் செய்து சிவாச்சாரியார்கள் கொடியேற்றுகின்றனர். இதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் தினமும் காலை, மாலை இரு வேளையும் மயில், கேடயம், பச்சைமயில், பூதம், நாகம், யானை, சிம்மம், வெள்ளிக்குதிரை, வெள்ளிமயில், வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தேரோட்டம்

தொடர்ந்து 8-ம் திருவிழாவான 27-ந்தேதி தேதி முருகன் விராலூருக்கு பல்லக்கில் எழுந்தருளி அங்கு மண்டகப்படி நடக்கிறது. பின்னர் அங்கிருந்து மறுநாள் 28-ம் தேதி காலை விராலிமலைக்கு முருகன் வருகிறார். பின்னர் தேரோட்டம் நடக்கிறது. 29-ந்தேதி காலை நடராஜர் தரிசனமும், இரவு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. 30-ந்தேதி விடையாற்றியுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் செயல் அலுவலர் ராமராஜா, ஆய்வாளர் லெட்சுமணன், மேற்பார்வையாளர் மாரிமுத்து, மண்டகப்படிதாரர்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்