மாவட்ட செய்திகள்

கிணற்றில் தூர் வார இறங்கியபோது கயிறு அறுந்து தொழிலாளி சாவு

கூடுவாஞ்சேரியில் கிணற்றில் தூர் வார இறங்கியபோது கயிறு அறுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் காலனி செங்கேணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை கூடுவாஞ்சேரி காந்தி நகரில் உள்ள உலகநாதன் என்பவரது வீட்டில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தூர் வாருவதற்காக கயிறு கட்டி இறங்கினார். அப்போது திடீரென கயிறு அறுந்தது.

இதில் செல்வராஜ் கிணற்றில் விழுந்து காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை