ஈரோடு,
ஈரோடு அருகே உள்ள சித்தோடு கூட்டுறவு நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் கார்த்தி என்கிற மணிகண்டன் (வயது 31). இவர் ஈரோட்டை அடுத்து உள்ள அய்யன்தோட்டம் வீதி பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்த பகுதியை அடுத்து உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் சுப்பிரமணி (53), என்பவர் பழைய பொருட்கள் வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். இவரது மகள் கார்த்திகா (23). இவர் திருமணமாகி ஈரோடு சென்னிமலை ரோடு மணல்மேடு பகுதியில் கணவருடன் இருந்தார். கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கார்த்திகா கர்ப்பம் அடைந்து ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கட்டிய கணவரை உதறித்தள்ளிய கார்த்திகா, வாய்க்கால் மேடு பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே கார்த்திகாவை நீண்டநேரமாக காணாததால் தந்தை சுப்பிரமணியும் மற்றவர்களும் கடைக்கு வந்தனர். அவர்களைப்பார்த்ததும் கார்த்தி அங்கிருந்து தப்பி ஓடினார். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திகா சாக்குப்பையில் திணிக்கப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.