மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி

குஜிலியம்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே உள்ள மெத்தைப்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 23). வேன் டிரைவர். கடந்த 4-ந்தேதி இவர், மோட்டார் சைக்கிளில் கரூர் நோக்கி சென்றார். வெள்ளப்பாறையை அடுத்த தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அப்போது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பஸ், திருமுருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருமுருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திருமுருகன் உயிரிழந்தார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு