சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது 
மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி எல்க்ஹில் குமரன் நகரை சேர்ந்த கோபால் என்பவரது மகன் பிரசாந்த் (வயது 19). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை சில மாதங்களாக காதலித்து வந்து உள்ளார். இதற்கிடையே சிறுமியை மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து சென்று பத்ரகாளியம்மன் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் ஊட்டிக்கு வந்து வீட்டில் தங்கி உள்ளார். அப்போது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி 18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்ததும், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு