மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது

புதுவையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்று அமைச்சர் கமலக் கண்ணன் கூறினார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பினை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

புதுவையிலும் தமிழக பாடத்திட்டமே பயன்படுத்தப்படுவதால் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்று கல்வி அமைச்சர் கமலக்கண்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:-

பழைய நிலையே...

பொதுத்தேர்வு தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை. ஆனால் புதுவையில் தேர்வுகளுக்கு ஒரு பள்ளி ஆசிரியரை மற்றொரு பள்ளியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகிறோம். அதேபோல் விடைத்தாள்களையும் பிற பள்ளி ஆசிரியர்களே திருத்தி வருகின்றனர். எனவே இப்போதைக்கு பழைய நிலையே தொடரும்.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

அமைச்சர் கமலக்கண்ணனின் கருத்தின் மூலம் இந்த ஆண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என்று தெரிகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து