மாவட்ட செய்திகள்

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் திடீர் தீ

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் காய்ந்த செடிகள் மற்றும் சருகுகள் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல புதிய படிக்கட்டு பாதை உள்ளது. இந்த பாதை அருகே மலைப்பகுதியில் காய்ந்த செடிகள் மற்றும் சருகுகள் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன. மேலும் கிரிவலபாதை அருகே ரோட்டின் ஓரமாக இருந்த சருகுகளும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மலைப்பகுதியில் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக மலையில் உள்ள சருகுகள் மீது தீப்பற்றி எரிய காரணம் என்ன? மர்ம நபர்கள் யாரும் தீ வைத்து விட்டார்களா என்று திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...