மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறப்பு

பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு ஒப்பந்தப்படி 25ந் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 28ந் தேதி நள்ளிரவு பூண்டி ஏரியை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் தற்போது 15 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அங்கிருந்து வினாடிக்கு 1300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதமும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 596 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 நிலவரப்படி ஏரியில் நீர் மட்டம் 24.85 அடியாக பதிவானது. 824 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு நேற்று காலை பேபி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் சென்னையில் குடிநீர் வினியோகம் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு