மாவட்ட செய்திகள்

திருவாரூரில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் திருவாரூரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

திருவாரூர்,

தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவாரூரில் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு திட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

போராட்டத்தின்போது ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்