மாவட்ட செய்திகள்

தியாகராயநகர் பிருந்தாவன் தெருவில் நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு

தியாகராயநகர் பிருந்தாவன் தெருவில் நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் சாலையின் நடுவில் பெரிய பள்ளம் விழுந்தது.

தினத்தந்தி

சென்னை தியாகராயநகர் துரைசாமி பாலத்தில் இருந்து அசோக்நகர் வரை இணைக்கும் முக்கிய சாலையாக பிருந்தாவன் தெரு இருந்து வருகிறது. காலை மற்றும் மாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் இந்த முக்கிய சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக திடீரென சாலையின் நடுவில் பெரிய பள்ளம் விழுந்தது.

சுமார் 3 அடி அகலம் கொண்ட இந்த பள்ளத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அசோக்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பள்ளத்தை சுற்றி தடுப்பு ஏற்படுத்தி அந்த பகுதியில் போக்குவரத்தை சரி செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பெருநகர சென்னை மாநகராட்சி, குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்றுத்துறை அதிகாரிகள் சாலையில் விழுந்த பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் இந்த பள்ளம் ஏற்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?