மாவட்ட செய்திகள்

தியாகராயநகரில் கஞ்சாவுடன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

சென்னை பாண்டிபஜார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினத்தந்தி

அப்போது தியாகராயநகர் ராஜா பாதர் தெருவில் கையில் பையுடன் 3 பேர் நின்றுகொண்டிருந்தனர். சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.

அதில் 3 கிலோ 700 கிராம் எடைகொண்ட கஞ்சா பொட்டலம் இருந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரூபேஷ் ரெட்டி (வயது 21), சயிலேஷ் ராயல் (21), வெங்கட நாகேந்திரபாபு (21) என்பதும், சென்னையில் தங்கி கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்