மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி பதுக்கிய 2 விற்பனையாளர்கள் உள்பட 3 பேருக்கு ஜெயில்

ரேஷன் அரிசி பதுக்கிய 2 விற்பனையாளர்கள் உள்பட 3 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

விருதுநகர்

ரேஷன் அரிசி பதுக்கிய 2 விற்பனையாளர்கள் உள்பட 3 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 25.4.2014 அன்று அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வாழவந்தான் கோவில் அருகே இருசக்கரவாகனத்தில் வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சந்திரன் என்பவரிடம் இருந்து 100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள தொட்டியங்குளம் ரயில்வே பாலத்தின் கீழ் பதுக்கிய 9 மூடைகளில் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் விசாரணை செய்ததில் அருப்புக்கோட்டை ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஜோசப் மற்றும் குணசீலன் ஆகியோரிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கியதாக தெரிவித்தார்.

ஜெயில்

இதைதொடர்ந்து சந்திரன், ஜோசப் மற்றும் குணசீலன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட் மருதுபாண்டி குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு 6 மாத ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், ரேஷன் கடை விற்பனையாளர் ஜோசப் மற்றும் குணசீலன் ஆகிய இருவருக்கும் தலா 3 வருட ஜெயில் தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்