மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா கலெக்டர் அலுவலகத்தில் 134 பேருக்கு மருத்துவ பரிசோதனை

திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் 134 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள், போலீசார் உள்பட ஏராளமானவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிற அரசு அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது மனைவி மற்றும் 2 மகள்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இவர்கள் 4 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள். இதற்கிடையே வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிற அரசு ஊழியர்கள் 134 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களது பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரியவரும். அதுவரை அரசு ஊழியர்களை கவனமாக இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை