திருவள்ளூர்,
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குட்கா ஊழலில் ஈடுபட்ட அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாநில மாணவர் அணி இணைச்செயலாளர் ஜெரால்டு, திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 300-க்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாநில விவசாய அணி அமைப்பாளர் களாம்பாக்கம் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், கிறிஸ்டி என்கின்ற அன்பரசு, ஜெயசீலன், கூளூர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.