மாவட்ட செய்திகள்

திருவள்ளூர், ஊத்துக்கோட்டையில் பலத்த மழை

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது.

தினத்தந்தி

திருவள்ளூர்,

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென திருவள்ளூர், ஈக்காடு, மணவாளநகர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, திருப்பாச்சூர், பிரயாங்குப்பம், கடம்பத்தூர், சத்தரை, பேரம்பாக்கம், கூவம், குமாரச்சேரி, இருளஞ்சேரி, சிற்றம்பாக்கம், களாம்பாக்கம், சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. கழிவுநீர் கால்வாய்களில் ஆங்காங்கே குப்பைகள், முள்செடிகள் சிக்கிக்கொண்டன. இதனால் மழை நீர் பாயாத நிலை ஏற்பட்டது. பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றினர். பின்னர் மழைநீர் தங்கு தடையின்றி பாய்ந்தது. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தாராட்சி, பாலவாக்கம், சூலைமேனி, சீதஞ்சேரி, சுருட்டப்பள்ளி, காரணி, தாசுகுப்பம், நரசா ரெட்டி கண்டிகை, புதுகுப்பம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பலத்த மழைக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளனார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு