மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் 3,200 லாரிகள் ஓடவில்லை

திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்தத்தால் 3,200 லாரிகள் ஓடவில்லை.

தினத்தந்தி

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,200 லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை திறந்தவெளி கிடங்குகளுக்கும், அரவை பணிகளுக்காக திருவாரூர் மாவட்ட அரிசி ஆலைகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் சரக்கு ரெயில் மூலமும் அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளர்கள், தங்களுடைய அரவை பணிக்கான நெல் மூட்டைகளை தங்களது சொந்த லாரிகளில் ஏற்றிக்கொள்வதாக கூறியுள்ளனர். இதனால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், இந்த நடைமுறையை கண்டித்து திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அரவை பணிகளுக்காக லோடுகளை, மில் உரிமையாளர்களின் லாரிகளில் ஏற்றிக்கொள்ள அனுமதித்து இருப்பதால் லாரி தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, மில் உரிமையாளர்களின் லாரிகளில் அரவைக்கான லோடுகளை ஏற்றும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தால் மாவட்டம் முழுவதும் 3,200 லாரிகள் ஓடவில்லை.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு