மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 103 பேர் சாவு

மராட்டியத்தில் மேலும் 103 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 287 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்து 300 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 103 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதில் புனே, மிரா பயந்தரில் தலா 10 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 2 ஆயிரத்து 465 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 31 ஆயிரத்து 333 பேர் குணமாகி உள்ளனர்.

மும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 1,109 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நகரில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 216 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல புதிதாக 49 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மும்பையில் நோய் தொற்றுக்கு 1,398 பேர் உயிரிழந்து உள்ளனர். புனே மாநகராட்சியில் 7 ஆயிரத்து 144 பேரும் (326 பேர் பலி), நவிமும்பை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 887 பேரும் (71 போ பலி) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்