மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில், கலெக்டரிடம் கோரிக்கை மனு

வயதானோர், ஊனமுற்றோர் என ஏராளமானோர் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரிய அலுவலகம் தாம்பரத்தில் செயல்பட்டு வருகிறது.

தினத்தந்தி

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இவர்களில் வயதானோர், ஊனமுற்றோர் என ஏராளமானோர் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரிய அலுவலகம் தாம்பரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வயதான முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சென்று வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. அவர்கள் காஞ்சீபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு சென்றுவர சிரமப்பட்டு வருகின்றனர்.

அதனால் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரிய அலுவலகம் அமைக்க வேண்டுமென காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் முப்படை மற்றும் துணை படைவீரர்கள் நலச்சங்க தலைவர் கேப்டன் ராமசாமி தலைமையில் நலச்சங்க உறுப்பினர்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்