மாவட்ட செய்திகள்

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த பலத்த காற்றின் காரணமாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் முள்ளூர் கிராமம் அருகே சாலையோரத்தில் நின்ற காட்டு மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரமானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை