மாவட்ட செய்திகள்

பந்தை எடுக்க முயன்றபோது கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

பந்தை எடுக்க முயன்றபோது கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

தினத்தந்தி

குமுளி,

குமுளியை அடுத்துள்ள ஆனவிலாசம் சாஸ்தாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில். அவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 12). நேற்று முன்தினம் இவன், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான்.அப்போது விளையாடி கொண்டிருந்த பந்து கிணற்றின் அருகே விழுந்துள்ளது. இதை எடுப்பதற்காக அவன் அங்கு சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சல் போட்டுள்ளான். சத்தம் கேட்டு செல்வி அங்கு சென்று பார்த்தார். தனது மகன் கிணற்றுக்குள் தவிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் திரண்டனர். பின்னர் கிணற்றுக்குள் தவித்த ரஞ்சித்குமாரை மீட்டனர். ஆனால் அவன் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குமுளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது தவறி விழுந்து சிறுவன் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்