மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

தூத்துக்குடி புனித அந்தோணியார் ஆலய 55வது ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 515 மணிக்கு முதல் திருப்பலி நடந்தது. காலை 6 மணிக்கு ஏரல் ஒத்தாசை மாதா ஆலய பங்குதந்தை சவரிமுத்து தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு திருப்பலிகள் நடந்தன.

நிகழ்ச்சியில் ஆலய பங்குதந்தை சுசிலன் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டு திருப்பலி


தொடர்ந்து விழா நாட்களில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 12ந்தேதி மாலை 630 மணிக்கு மறைமாவட்ட முதல்வர் கிருபாகரன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், 13ந்தேதி காலை 630 மணிக்கு திருவிழா கூட்டு திருப்பலியும், மதியம் 12 மணிக்கு நவநாள் திருவிழா திருப்பலியும் நடக்கிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு