அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டனர். காரில் இருந்து மீட்கப்பட்ட இருவரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அபாயகரமாக உள்ள பேரூர் வளைவு பகுதியில் இதுவரை பல வாகன விபத்துகள் நடைபெற்றுள்ளதாகவும், இந்த வளைவு பகுதியில் தகடுடன் கூடிய பாதுகாப்பு கம்பி அமைக்காததே விபத்துக்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.