மாவட்ட செய்திகள்

ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் 2 பேர் சென்னையில் பதுங்கல்; போலீசார் விரைந்தனர்

சிவகங்கை மாவட்டம் சித்தலூரை சேர்ந்த பிரபல ரவுடி கொளஞ்சிநாதன், கடந்த 20–ந் தேதி ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது.

தினத்தந்தி

புதுச்சேரி,

சிவகங்கை மாவட்டம் சித்தலூரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 48). பிரபல ரவுடி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவையில் குடும்பத்தினருடன் வந்தார். இவர் கடந்த 20ந் தேதி அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது.

இந்த வழக்கில் சிவகங்கையை சேர்ந்த சேவற்கொடி (30), பரமசிவம் (25), சேகர் (26), கண்ணன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய தலைமறைவாகி உள்ள சிவகங்கையை சேர்ந்த மணி (29), அழகர் ஆகியோரை பிடிக்க தனிப்படை போலீசார் சிவகங்கையில் முகாமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மணி, அழகர் ஆகியோர் சென்னையில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்