மாவட்ட செய்திகள்

குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் மணல் கடத்திய 2 பேர் கைது

குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் மணல் கடத்திய 2 பேரை கைது செய்து பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் அடையார் ஆற்றங்கரையோரம் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மண் கடத்தப்படுவதாக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குன்றத்தூர் வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது இரவு நேரத்தில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரிகளில் மண்ணை திருட்டுத்தனமாக கடத்தப்படுவது தெரியவந்ததது.

இதனையடுத்து, குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணல் கடத்தியதாக குன்றத்தூர் நத்தம் பகுதியை சேர்ந்த எழில்வாணன் (வயது 36), சிக்கராயபுரம் சேர்ந்த கண்ணன் (35), ஆகிய 2 பேரை கைது செய்தனர். லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்