மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி போராட்டம் விவசாயிகள் சங்கத்தினர் 33 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி போராட்டம் விவசாயிகள் சங்கத்தினர் 33 பேர் மீது வழக்கு.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று முன்தினம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்டத்தை எதிர்த்தும், மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்கள் சட்டவிரோதமாக முன் அனுமதியின்றி ஒன்று கூடி கொரோனா தொற்று பரவும் விதமாக பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் நின்று கோஷமிட்டனர்.

இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை