மாவட்ட செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மரிய சகாய அந்தோணி தெரிவித்துள்ளார்.

நெல்லை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.

இந்த தொகை இளைஞர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட மாட்டாது.

எனினும், தொலைதூர கல்வி அல்லது தபால் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவி தொகை பெறலாம். ஏற்கனவே உதவி தொகை பெற்று வருபவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சுய உறுதி மொழி ஆவணத்தை ஒப்படைக்காதவர்களுக்கு உதவி தொகை நிறுத்தப்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவி தொகை வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றவர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவி தொகை பெறாதவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.

உதவி தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதி உள்ளவர்கள், நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். உதவி தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்