மாவட்ட செய்திகள்

உத்திரமேரூரில் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

உத்திரமேரூரில் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து எற்பட்டது.

தினத்தந்தி

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென வானில் கருமேகம் சூழ்ந்து பயங்கர இடி, மின்னலுடன் சூறை காற்று வீசியது.

இதில் மேனலூர் கிராமத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்துக்கு அருகில் சென்ற உயரழுத்த மின்சார கம்பிகள் காற்றின் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று உரசியது. அதில் இருந்து வந்த தீப்பொறிகள் கிருஷ்ணமூர்த்தியின் கரும்பு தோட்டத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

நல்ல விளைச்சலுடன் அரவைக்கு தயாராக இருந்த 3 ஏக்கரிலான கரும்பு தோட்டம் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கரும்பு தோட்டத்தில் எரிந்த தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர், ஓலை கொட்டைகளும் தீ விபத்தில் இருந்து தப்பியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை