மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் வைகாசி விசாக திருவிழா: யானை மீது வெள்ளி குடத்தில் புனித நீர் ஊர்வலம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று யானை மீது வெள்ளி குடத்தில் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றுது.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் 4-ம்நாள் விழாவான நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ வழிபாடு, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

புனித நீர் ஊர்வலம்

விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருதல், காலை 9 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த விநாயகர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் புனித நீர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலம் கோவிலை அடைந்ததும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களும், புனித நீராலும் அபிஷேகம் நடந்தது.

மதியம் அன்னதானம், இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்