மாவட்ட செய்திகள்

வேளாளர், வெள்ளாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட அகில இந்திய வேளாளர், வெள்ளாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினத்தந்தி

கரூர்,

கரூர் மாவட்ட அகில இந்திய வேளாளர், வெள்ளாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் கார்வேந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, ஒரு சில உட்பிரிவினை சேர்ந்த சமுதாயத்தினர் வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய முனைப்போடு இருக்கின்றனர். இது தமிழகத்தில் சாதி மோதல் ஏற்பட வழி வகுத்து விடும். எனவே, அத்தகைய முயற்சியை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வேளாளர், வெள்ளாளர்கள் அமைப்புகள், வ.உ.சி. பேரவையின் நிர்வாகிகள், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு