மாவட்ட செய்திகள்

விநாயகர் கோவில் வருடாபிஷேக விழாவையொட்டி மஞ்சு விரட்டு

மேலைச்சிவபுரி விநாயகர் கோவில் வருடாபிஷேக விழாவையொட்டி நேற்று மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற காளைகளை இளைஞர்கள் விரட்டி சென்று பிடித்தனர்.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரி சுவாமிநாத விநாயகர் கோவில் வருடாபிஷேக விழாவையொட்டி மேலைச்சிவபுரி மற்றும் வேகுப்பட்டியில் கிராம மக்கள் சார்பில் நேற்று மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அக்காளைகளை இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பெரும்பாலான காளைகள் இளைஞர்களிடம் பிடிபடாமல் துள்ளி குதித்து ஓடின.

மஞ்சு விரட்டினை சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் செய்திருந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு