மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறல்; ஒரே நாளில் 222 வாகனங்கள் பறிமுதல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறல்; ஒரே நாளில் 222 வாகனங்கள் பறிமுதல்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தாற்று 2-வது அலையின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், மாவட்ட போலீஸ் துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின்பேரில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பணி அமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களில் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களின் 222 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் முககவசம் அணியாதது தொடர்பாக 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு