மாவட்ட செய்திகள்

விளைநிலங்களுக்குள் புகுந்த தண்ணீர்

வத்தலக்குண்டு அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது.

தினத்தந்தி

திண்டுக்கல்:

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு கண்மாய்க்கு மஞ்சளாறு அணையில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த கால்வாயில் பழைய வத்தலக்குண்டு பிரிவு அருகே நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, வத்தலக்குண்டு வருவாய் அலுவலர் அங்குசாமி, கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த உடைப்பை சரி செய்ய உத்தரவிட்டனர். அதன்படி, கால்வாய் உடைப்பை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை