மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்ட எல்லையில் முதல்-அமைச்சருக்கு இன்று வரவேற்பு: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கலெக்டர் பங்கேற்பு

மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக நெல்லை செல்லும் வழியில் முதல்-அமைச்சருக்கு மாவட்ட எல்லையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் கண்ணன் ஆகியோர் வரவேற்பு அளிக்கின்றனர்.

விருதுநகர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததுடன், முடிவடைந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கும் அர்ப்பணித்தார்.

முதல்-அமைச்சர் இன்று(வெள்ளிக்கிழமை) நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கொரோனா ஆய்வு மேற்கொள்கிறார்.

இதற்காக மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக இன்று நெல்லை செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, மாவட்ட எல்லையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் கண்ணன், போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

இதைதொடர்ந்து விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு முதல்-அமைச்சர் வருகிறார். அங்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் கண்ணன் மற்றும் அதிகாரிகளிடம் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம், அதற்கு எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு