மாவட்ட செய்திகள்

ஓடும் ரெயிலில் ஏற முயன்ற போது தண்டவாளத்தில் விழுந்த வடமாநில வாலிபர் சாவு

சாமல்பட்டியில் ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தண்டவாளத்தில் விழுந்த வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

ஊத்தங்கரை,

பீகார் மாநிலம் தன்பாத் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர்குமார் (வயது 20). தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூலி வேலைக்காக திருப்பூருக்கு வந்துள்ளார். அங்கு வேலை முடிந்த பின்னர் நேற்று தன்பாத் செல்வதற்காக ரெயிலில் வந்து கொண்டிருந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் அவர் வந்த ரெயில் நின்று கொண்டிருந்தது. அப்போது தண்ணீர் குடிப்பதற்காக சிக்கந்தர்குமார் ரெயிலில் இருந்து கீழே இறங்கி உள்ளார். பிளாட்பாரத்தில் அவர் தண்ணீர் குடித்து கொண்டிருந்த நேரத்தில் ரெயில் புறப்பட்டு சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிக்கந்தர்குமார் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி தண்டவாளத்தில் விழுந்தார். அந்த நேரம் அவர் மீது ரெயில் ஏறியது. இதில் படுகாயம் அடைந்த சிக்கந்தர்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று சிக்கந்தர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை